Featured Articles
All Stories

சனி, 27 நவம்பர், 2010

கடவுள்களை தொலைத்து விட்டோம்.

நீ இல்லை என்று தான்
எனக்கு சொல்லிக் கொள் (ல்) கிறார்கள்


நானும் இல்லை என்றே சொன்னேன்
உன்னையல்ல
அவர்கள் சொன்ன சொல்லை


இன்று ஏனோ என் மனம் தவிக்கிறது
இத்தனை நாளாய் தேடியும்...????
உள்மனம் சமூகச் சொல்லை ஏற்க விளைகிறது.


இந்த மண் - உன்னை
விழுங்கிய நாளை மறந்திருக்கும்
ஏனென்றால்
அது உன்னை மட்டும் விழுங்கலையே.
பிற்பகல் 8:25 - By ம.தி.சுதா 95

95 கருத்துகள்:

வியாழன், 25 நவம்பர், 2010

இந்தியாவிலும் தமிழர் சிறுபான்மையினரா..??

                என்ன கேள்வியைப் பார்க்க குழப்பமாயிருக்கிறதா..?? என்ன செய்வது கேட்க வைத்துவிட்டார்களே காரணம் இன்று இடம் பெற்ற மீனவர்களின் பேச்சு வார்த்தையாகும்.
              இன்று இந்தியா மற்றும் இலங்கை மீனவர்களிடையே மீன்பிடி சம்பந்தமான பேச்சு வார்த்தை ஒன்று இடம் பெற்றது இதில் இந்திய மீனவர் சார்பாக தேவதாசும் இலங்கை மீனவர் சார்பாக தவரட்ணமும் கலந்து கொண்டார்கள். இதில் தேவதாசால் வாரத்தில் 2 நாட்களாவது சுதந்திரமாக மீன்பிடிக்க அனுமதி கேட்கப்பட்டது அனால் தவரட்ணம் இதற்கு சம்மதிக்கவில்லை. அவர் சொன்ன காரணம் இந்திய மீனவர்கள் இழுவைப் படகுகளால் மீன் பிடித்து கடல் வளத்தை சீர் குலைக்கின்றனர் என்பதாகும். அனால் 1974 ல் ஏற்படத்தப்பட்ட ஒரு ஒப்பந்தத்தில் இரு சாராரும் சேர்ந்து மீன் பிடிக்கலாம் என்ற ஒரு பரஸ்பர ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
பிற்பகல் 11:37 - By ம.தி.சுதா 66

66 கருத்துகள்:

புதன், 24 நவம்பர், 2010

HOLLYWOOD படங்களில் உள்ள தவறுகள் படங்களுடன்... பாகம்-2

           வாருங்கள் சகோதரங்களே எனது பதிவின் இரண்டாம் பாகத்திற்கு...
பாகம் ஒன்றிற்கு இங்கேபோகவும்.

           ஆரம்பத்திலேயே சொல்லிக் கொள்கிறேன் இது எனது தேடல் தான்........
சென்ற பதிவில் இரு படங்கள் தவறவிடப்பட்டிருந்தது. அதில் ஒன்று  (TITANIC) படத்தில் இடம் பெற்ற காட்சி ஒன்றாகும்.
முற்பகல் 12:05 - By ம.தி.சுதா 34

34 கருத்துகள்:

செவ்வாய், 23 நவம்பர், 2010

HOLLYWOOD படங்களில் உள்ள தவறுகள் படங்களுடன்... பாகம்-1

                 இரண்டாது தடவையாக எமது பித்தலாட்ட தமிழ் சினிமாவிலிருந்து கொஞ்சம் எட்டப் போய் வரப் போகிறேன். தவறுகள் விடுவது மனிதனின் சாதாரண வழக்கம் என்பது யாவரும் அறிந்ததே அதற்காக எம்மவர் போல் கொப்பியடிக்கக் கூடாது தான் (எம்மவரின் கொப்பியை இங்கே பாருங்கள்) பல நுணுக்கமாக எடுக்கப்படும் ஹெலிவுட் உலகத்திலும் பல தவறுகள் வந்தே தீருகிறது அதில் பல விருதுகளைப் பெற்ற படங்களும் உள்ளடங்கியே இருக்கிறது.
        
முற்பகல் 11:19 - By ம.தி.சுதா 37

37 கருத்துகள்:

ஞாயிறு, 21 நவம்பர், 2010

குடும்ப நடிகையின் ஆபாசப் புகைப்படங்கள் (நிமிடக் கதை 18+)


இந்தப் படத்திற்கும் பதிவிற்கும் சம்பந்தமே இல்லை.... என்ன சுதா 18+ ற்கு இறங்கிட்டானே என்று பயப்படாதியுங்கோ..
இது ஒரு தீர்க்கதரிசனக் கதையாகும்.
          அன்றைய செய்திகளனைத்தும் அவள் பெயரைத் தாங்கியே வந்திருந்தது. அவள் பிரபலத்தில் கண் வைத்த சிலர் செய்த சதி தான் இது என பலர் பேசினார்கள்.அது சரி இது எப்படி மதியோடை தளத்திற்குக் கிடைத்தது என்றும் பலர் பேசிக் கொண்டார்கள். அந்தப் படம் செயற்கையானது என ஒரு தொகை பேரும். இல்லை தத்தரூபமாக எடுக்கப்பட்டது என ஒரு குழுவும் வாதிட்டுக் கொண்டது.
முற்பகல் 10:25 - By ம.தி.சுதா 38

38 கருத்துகள்:

சனி, 13 நவம்பர், 2010

வாழைப்பழத்தால் சோளம் வறுப்பதெப்படி..???

          இந்தப் பரந்த உலகத்தினில் எமக்குத் தெரியாமல் எத்தனை விசயம் பரந்து கிடக்கிறது. எப்போதோ ஒரு நாள் ஒரு நண்பன் கேட்டான் வாழைப்பழத்தில் கதிர்வீச்சு (radiation) இருக்குதாமே உனக்குத் தெரியுமா தெரிந்தால் எழுதேன்என்றான். ஆனால் எனக்கும் அவன் நிலமை தான் இப்படிக் கேட்ட விசயமே தவிர பெரிதாய் அறிந்திருக்கவில்லை. அப்படியிருக்கையில் எப்படி எழுதுவது என்று விட்டு விட்டுவிட்டேன் (விஞ்ஞானியே பரிசோதனை முடித்து விட்டீரா..?? முடிவை காட்டென்றால் நான் என்ன செய்ய). ஆனால் கொஞ்சமாய் தெரிந்ததை சொல்லுறேனுங்க.......
         பல தாவரப் பொருட்களில் கதிர்வீச்சு இருக்கிறது எனக் கண்டபிடிக்கப்பட்டாலும் அதிலே நாங்கள் அதிகமாக அறிந்திருப்பது வாழைப்பழம் மட்டுமே ஆகும். சாதாரணமாகவே வாழைப்பழத்தில் பொட்டாசியம் (K-40)அதிகமாகக் காணப்படுகிறது. இதில் காணப்படும் இயற்கை பொட்டாசியம் (அண்ணளவாக 0.0117%) தான் இதன் கதிர் வீச்சுக்குக் காரணம் என்று குறிப்பிடுகிறார்கள்.  ஒரு கிலோகிராம் வாழைப்பழத்தில் 3520 பிகோகியுறிஸ் (3520 picocuries per kg) என்ற அளவில் கதிர்வீச்சு இருக்கிறது. இது பாலில் ஒரு லிற்றருக்கு 20 பிகோகியுறிஸ்  (20 picocuries/liter) என்ற அளவில் இருக்கிறது.
பிற்பகல் 9:23 - By ம.தி.சுதா 62

62 கருத்துகள்:

புதன், 10 நவம்பர், 2010

குதிரைச் சிலைகளின் உருவ அமைப்பும் அதன் அர்த்தமும்...iii

          மனித பரிமாணத்திலிருந்து அவனின் ஒவ்வொரு கலாச்சார மாற்றத்திலும் இந்தக் குதிரை பங்கெடுத்துக் கொண்டு தான் இருக்கிறது.
குதிரைக்கு இந்தளவு மவுசு வந்ததற்கு பல காரணங்கள் இருக்கலாம். பல பழமொழிகளில் இதன் பெயர் இடம்பெற்றிருப்பத்தான் இதன் இன்னுமொரு தனிச் சிறப்பு.
                 நடிகர் பிரபு கூட இடைப்பட்ட ஒரு காலப்பகுதியில் கட்டாயம் ஒரு பாடலாவது குதிரையில் வரும்படி வைத்திருப்பார். அரங்கேற்ற வேளை திரைப்படத்தில் அவர் வரும் காட்சி மிகவும் கம்பீரமாக இருக்கும். கம்பீரத்திற்காகத் தான் அதை விரும்பினார்களோ தெரியல.
பிற்பகல் 7:41 - By ம.தி.சுதா 40

40 கருத்துகள்:

சனி, 6 நவம்பர், 2010

இமயத்தில் ரஜனி என்ன செய்கிறார்.. (புகைப்படத்துடன்).

                      சில விசயங்களில் சுப்பர் ஸ்டார் சுப்பர் ஸ்டாராகவே இருக்கிறார். அவரை வெற்றியோ தோல்வியோ பாதிப்பதில்லை என்பதற்கு இதுவும் ஒரு பெரும் உதாரணமாகும். இங்கு சண் ரீவி பிழிந்த தேசிக்காயை பிழியோ பிழியென்று பிழிந்து கசக்கும் சாற்றைக் கூடா கரும்புச் சாறென்று கூறி ஏற்கனவே நாம் குடித்த கருப்பம் சாற்றை வேப்பெண்ணையென நினைத்துக் கொண்டிருக்க இவரைப் பார்த்திர்களா எழுதிய பதிவை திருப்பத் திருப்ப வாசிக்கும் புதுப் பதிவர் போல் இல்லாமல் (என்னைப் போல்) மனிதர் புதிதாய் சிந்திக்க புறப்பட்டு விட்டார்.
முற்பகல் 10:49 - By ம.தி.சுதா 34

34 கருத்துகள்:

புதன், 3 நவம்பர், 2010

கிரிக்கேட்டில் கிப்சும்.. சிலாகிக்கப்படும் புத்தகமும்..

             ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் தென்னாபிரிக்கா அணியின் தூண் போல் நின்றவர்களில் ஒருவர் தான் இந்த கெர்சல் கிப்ஸ் (hersels gibbs) ஆவார். இவர்  கேறிகிருஸ்டனுடன் களம் புகுந்தால் மைதானமே ஒரு அல்லோகல்லோலப்படும். அவுஸ்திரேலியாவுக்கு தென்னாபிரிக்கா பதிலடி கொடுத்த போட்டியை யாரும் மறந்திருக்கமாட்டீர்கள் என நினைக்கிறேன். கிளேன் மெக்ராத் ஒய்வால் சந்தோசப்பட்டவர்களில் இவரும் ஒருவர் தான் காரணம் பல தடவை  காலால் மறைத்த குற்றத்திற்காய் இவர் களம் விலகியிருக்கிறார்.
         
பிற்பகல் 5:08 - By ம.தி.சுதா 33

33 கருத்துகள்:

திங்கள், 1 நவம்பர், 2010

இலக்கியத்தில்....... சிறந்த நட்பு இது தான்...

         தமிழ் இலக்கியம் என்பது ஒரு பெரும் கடல் அங்கு பாசியிலிருந்து வலம்புரி வரை எல்லாம் இருக்கிறது. முத்துக் குளிப்போருக்குத் தான் பெரிய விசயங்க கிடைக்கும் அவர்களின் தயவால் ஏற்படும் குழப்பத்தால் சலனப்படும் சில மீன்கள் சில சிறியவரின் தூண்டிலிலும் விழுகிறது. அப்படி ஒன்று தான் இக்கதை. என்னைப் பொறுத்த வரை என்னை மிகவும் கவர்ந்த இல்லை.. இல்லை மிகவும் பாதித்த நட்பு இது தான். 
          சென்றவாரம் ஒரு சகோதரி ஒருவர் நட்புப் பற்றி எழுதுங்களேன் எனக் கேட்டிருந்தார். எனக்கு உடனே இக்கதை தான் நினைவுக்கு வந்தது காரணம் இதுவும் ஒரு வதனப்பத்தகத்தி (FACE BOOK)  ற்கு பொருத்தமான கதை தான். வாருங்கள் பார்ப்போம்.
பிற்பகல் 1:51 - By ம.தி.சுதா 28

28 கருத்துகள்:

மொத்தப் பக்கக்காட்சிகள்

பின்பற்றுபவர்கள்

என் குறும்படங்கள்













back to top