Featured Articles
All Stories

வியாழன், 19 ஜூலை, 2012

அறிவூட்டும் கவிதைகள் – 1

காதல் வண்டு போன்றது
உலகில் அதிகமாய்
இருக்கிறது.

காதல் நாய் போன்றது
உலகில் எந்த தட்ப வெப்பத்திலும்
வாழ்ந்து பிழைக்கிறது.
முற்பகல் 12:15 - By ம.தி.சுதா 26

26 கருத்துகள்:

ஞாயிறு, 15 ஜூலை, 2012

பெண்பிள்ளைகளை வாயில் போடும் ஆண்பிள்ளைகளின் தாய்கள்

உலக நாகரீகமானது எவ்வளவு முன்னேற்றம் அடைந்து சென்றாலும் சில பெண்களுக்கான சில அடிப்படைக் குணங்கள் மாறாமலே இருக்கிறது. இவை நகரப்பகுதிகளில் குறைவாக இருந்தாலும் கிராமப்புறங்களில் கணவர்மாராலேயே அடக்க முடியாத ஒரு நோயக மாறியிருக்கிறது.

அப்படி என்ன நோய் என்று புரியாமல் விழிக்கிறீர்களா? போட்டி போட்டுக் கொண்டு ஆண் பிள்ளைகளைப் பெறுவது. அவர்கள் வாயசுக்கு வர முன்னரே சீதண விபரத்தை அறிவிப்பது. அதன் பின்னர் அவன் காதலிக்கும் பெட்டை பற்றி ஒரு வதந்தி கிளப்பி அவளை பிரித்து விட்டு மகனை நல்ல விலைக்கு விற்றுவிட்டு ஊரில் உள்ள பெண்பிள்ளைகள் பற்றி கதை கட்டுவது இது தான் அவர்களுக்கு இருக்கும் தீர்க்கப்படாத வியாதியாகும்.

இதற்கெல்லாம யாரை குறை சொல்வது என்று தெரியவில்லை.

இப்பதிவுக்கான காரணம் இது தான்.... நான வாழும் சமூகம் ஒன்றில் ஒரு அக்கா ஒருவர் அயலூர்காரர் ஒருவரை காதலித்தார். இதில் அந்த வீட்டில் எவருக்கும் உடன்பாடில்லை அதனால் அடுத்த கட்டம் என்ன எதிர்ப்புத் தானே... ஆனால் இங்கு நடந்தது சற்று வித்தியாசமானது. அந்த அக்காவுக்கு எல்லோரும் ஆலோசனை கூறியும் கேட்பதாயில்லை. ஆனால் வீட்டார் திருமணத்திற்கு சம்மதிக்கவும் இல்லை.

அதீத எதிர்ப்பு காட்டினால் வெளியேறி குடும்ப மானம் போய் விடும் என்பதற்காக ஒரே ஒரு விதி போட்டார்கள். நீ போனால் எமக்கும் உனக்கும் எந்த சம்பந்தமுமில்லை. அந்தளவுமே நடந்தது. அவர் காதலித்த ஆடவர் , ஆலயத்தில் திருமண ஒழுங்கை எல்லாம் செய்து விட்டு அதிகாலையே வாகனத்தில் வீட்டுக்கு வந்தார். அந்த அக்காவின் தாயாரே ஏற்றி அனுப்பி வைத்தார். காலையே திருமணம் முடிந்துவிட்டது. அத்துடன் அவரும் தனது புகுந்த வீடு போய்விட்டார்.

உறவுகளே உங்களிடம் ஒரு கேள்வி?
இதை ஓரு பெண் வீட்டை விட்டு ஓடிவிட்டார் என்றா வாய்க்கு வந்தபடி கூறுவது. குடும்ப கௌரவத்திற்காகத் தான் குடும்பத்தார் கடைசி நிமிடம் வரை மிக மிக நாகரீகமாக நடந்து கொண்டார்கள். அதே சமூகத்தை சேர்ந்த நீங்கள் எலும்பில்லாத நாக்கால் இப்படியா கதைப்பது.
அதிலும் ஒருவர் என் காது பட கூறினார். இப்படி ஒரு நிலமையில் நான் தாயாக இருந்தால் மருந்து குடித்து செத்திருப்பேனாம். தாயே காலம் இன்னும் உருண்டு முடியவில்லை உன் மகனும் மாற்றான் சமூகத்தில் மணம் முடிக்கும் போது உயிருடன் தானே இருந்து பார்க்கப் போகிறாய்

தாய்க்குலமே தயவு செய்து உலகத்தில் உள்ள ஒவ்வொரு பெண்ணையும் உங்கள் குழந்தை போல நோக்குங்கள். சிலவேளை அவர்கள் தப்பிழைத்திருந்தாலும் மறைத்துத் தான் கதைக்க வேண்டும் ஏனென்றால் இது ஒரு சந்ததியின் எதிர்காலத்தை மாற்றும் விடயமாகும்.

குறிப்பு - தலைப்பானது கிராம மொழி வழக்குக்கு அமைவாக அமைக்கப்பட்டுள்ளது.
படங்கள் - நன்றி கூகுல்
பிற்பகல் 9:43 - By ம.தி.சுதா 14

14 கருத்துகள்:

செவ்வாய், 10 ஜூலை, 2012

தென்னிந்தியக் கலைஞர்களின் ஈழவருகையின் சாதகமும் பாதகமும்

முற்குறிப்பு - இப்பதிவானது எவருடைய உணர்வையோ நாட்டுப்பற்றையோ சீண்டும் விதமாக அமைக்கப்படவில்லை. தமிழன் பல தடவை சிந்திக்கமலும் தன்னிச்சையாகவும் நடந்ததன் விளைவுகளைத் தான் இன்று எம் இனம் அனுபவிக்கிறது. இப்பதிவானது ஒரு கருத்து அறிதலுக்காகவே இடப்படுகிறது. 
பிற்பகல் 9:49 - By ம.தி.சுதா 24

24 கருத்துகள்:

ஞாயிறு, 1 ஜூலை, 2012

ஏழை மாணவன் ஒருவனை கரை ஏற்ற வாருங்கள்

வணக்கம் உறவுகளே சேமம் எப்படி?
சரியாக ஒரு மாத இடைவெளியின் பின்னர் ஒரு அவசர உதவிக்காக என் தளம் மீண்டிருக்கிறேன். (தற்காலிகமாக)
காரணம் என்னவென்றால் என் கண்ணில் பட்ட ஒரு மாணவனுக்காகத் தான் இங்கு வந்திருக்கிறேன். இங்கு அவனது பெயரை நான் பகிரவில்லை. ஆனால் ஊரையும் பாடசாலையையும் தருகின்றேன். யாராவது உதவ விரும்பினால் அவர்களுக்கு நேரடி தொடர்பு ஏற்படுத்திக் கொடுக்கப்படும்.

இம் மாணவன் யாழ் உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன் கல்லூரியில் சாதாரண தரம் படித்துக் கொண்டிருக்கிறான். இவன் வல்வெட்டித் துறையிலுள்ள தீருவில் பகுதியை சார்ந்த மாணவன்.
இவனது சாதனை என்னவென்றால் இந்த பாடசாலைக்குள் நுழைந்த குறிப்பிட்ட சில நாளிலேயே அனைத்து மாணவர்களையும் முந்தி முழுப்பாடத்திலும் முதன்மைப் பெறுபேறைப் பெற்றிருக்கிறான். ஆனால் இவனது குடும்பப் பின்னணி சற்று மனதை நெருடுவது ஆகும்.

இறுதிப் போரில் போரிற்கு அழைத்துச் செல்லப்பட்ட அண்ணனின் முகவரி தெரியாது. தந்தை ராணுவ பகுதிக்குள் வரும் போது மறுமணம் செய்து இக் குடும்பத்தை கைவிட்டு விட்டார். தாயும் ஒரு தங்கையும் தம்பியுமே எஞ்சி நிற்பவர்கள். ஆனால் இப்படி சாதனை புரியும் இம் மாணவன் இடியப்பம், தோசை போன்றன விற்றுத் தான் பாடசாலையே வருகிறான். இது தான் இவர்களது நாளாந்த வருமானமும் கூட.

பழைய காலங்களில் இவை சாத்தியப்பட்டிருக்கலாம். ஆனால் இன்றைய நாளில் ஒரு சாதாரண தர மாணவனின் முழுமையான கற்கை நெறிக்கே மாதம் 2000 ரூபாய்  தேவைப்படும். நிச்சயம் எதிர்காலத்தில் நல்லதொரு நிலைக்கு வரக் கூடியவன் என இவனது விஞ்ஞான பாட ஆசிரியரே தெரிவிக்கின்றார்.

யாராவது இவனை பொறுப்பேற்று கற்பிக்க விரும்புபவர்கள் முன்வாருங்கள். தங்களால் இயலாவிடினும் பரவாயில்லை இத்தகவலை மற்றவருக்கு சேர்ப்பதன் மூலம் இவனுக்கு உதவுங்கள்

நன்றிச் செதுக்கலுடன்
ம.தி.சுதா

குறிப்பு - இது என் மீள் வருகையல்ல இன்னும் சில நாளில் ஓய்வின் பின்னர் மீண்டும் ஒரு புதிய மனிதனாக சந்திக்கிறேன். பழைய ம.தி.சுதா நிச்சயம் மீண்டும் வரமாட்டான். அன்பு உறவுகளின் வேண்டுகைக்கமைவாக மீண்டும் ஆரம்ப கால ம.தி.சுதாவாகவே மாறிக் கொள்கிறேன்.
முற்பகல் 9:57 - By ம.தி.சுதா 21

21 கருத்துகள்:

மொத்தப் பக்கக்காட்சிகள்

பின்பற்றுபவர்கள்

என் குறும்படங்கள்













back to top