Featured Articles
All Stories

வியாழன், 30 டிசம்பர், 2010

அழியா வடுக்கள்

இந்த வருடத்தின் இறுதிப் பதிவுடன் விடை பெறுகிறேன். என் உறவுகள் எல்லோருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்

உறவுக்குள் கரை நீ
என்னிலாடும்
உணர்வுக்குள் துளி நீ
என்னுள் வாழும் காரிகை நீ
மனக் கண்ணில் வரைந்த தூரிகை நீ
பிற்பகல் 11:23 - By ம.தி.சுதா 47

47 கருத்துகள்:

புதன், 29 டிசம்பர், 2010

பத்து ஆண்டினுள் பாதித்த பாடல்கள்.

               இசை என்பது பொதுவானதே இதில் ஈழப்பாடலும் சரி சிங்களப்பாடலும் சரி எம் காது தான் அதன் ஈர்பை தீர்மானிக்கும். அது போல் தான் எனது பார்வையும் அமையப் போகிறது. சகோதரர் ஜீவதர்சன் அழைத்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி கடந்த 10 அண்டில் என் மனதை கவர்ந்த பாடல்களை தருகிறேன்

 “ஆயிரம் தான் கவி சொன்னேன்
          முதலாவது பாடலை கட்டாயம் சகல உறவகளையும் கேட்குமாறு பணிவுடன் கேட்கிறேன். இந்தப் பாடலை நான் முதல் முதலாகக் கேட்டது பதிவர் லோசன் அண்ணாவின் தாயின் பிறந்த நாள் அன்று தான். அப்போது அதை திருடிய எனது கைப்பேசி இன்று் என்னை கலங்கடித்த வண்ணமே இருக்கிறது. பின்னர் தம்பி ஜனகன் தான் இந்த பாடல் பெற உதவினார். வைரமுத்துவின் இந்த பாட்லை ஒரு தடவை கேளுங்கள் நிச்சயம் கண்ணீர் வரும். அவர் ஆயிரத்தில் ஒருவனில் எழுதிய ஒரு வரியால் கடுப்பாகி இருந்த என்னை மீண்டும் அவர் பக்கம் ஈர்த்த வரிகள் இவை
முற்பகல் 2:10 - By ம.தி.சுதா 44

44 கருத்துகள்:

வியாழன், 23 டிசம்பர், 2010

மறக்கப்பட்ட பிரபல பாடகர்கள் Boney M (கிறிஸ்மஸ் சிறப்பு பதிவு)

                   உலகில் வாழும் எந்த ஒரு கிறிஸ்தவனும் இவர்கள் பாடலை அறியாமல் இருக்கவேமாட்டான் அந்தளவுக்கு அருமையாகவும் ஈர்க்கும்
விதத்திலும் படிப்பதில் வல்லவர்கள் யாரா அவர்கள் தான் ஒரு குழுவாக ஐரோப்பியாவையே கலக்கிய Boney M. 1975 ஆண்டில் தான் இவர்கள் முதல் முதல் தொலைக்காட்சி முன்னால் தோன்றினார்கள்.
              மேற்கு ஜெர்மனில் தோற்றம் பெற்ற இந்தக் குழுவானது அவுஸ்திரேலியா, நெதர்லாந்து, பெல்ஜியம் என ஒரு சுற்றச் சுற்றி கலக்கி வந்தது. இக்குழுவின் ஸ்தாபகராக இருந்தவர்Frank Farian ஆவார் அத்துடன் அக்குழுவில்Bobby Farrell, Liz Mitchell, Marcia Barrett, Maizie Williams  ஆகியோர் பங்கு கொண்டிருந்தார்கள்.
முற்பகல் 2:57 - By ம.தி.சுதா 35

35 கருத்துகள்:

திங்கள், 20 டிசம்பர், 2010

யாழ்ப்பாணத்தில் உருவாகும் திரைப்படமும் அதன் பின்னணியும்.

                            எம்மவர்களின் திறமையை மீண்டும் நிருபிக்க ஒரு சந்தர்ப்பமாக நேற்று இது அமைந்தது. aaa movies international ஏற்பாட்டில் எடுக்கப்பட இருக்கும் பனைமரக்காடு என்ற குறும்படத்திற்கான பட பூசை வெங்கடேஸ்வர வரதராயப் பெருமாள் கோயிலில் இடம் பெற்றது.
      
பிற்பகல் 9:03 - By ம.தி.சுதா 52

52 கருத்துகள்:

எனைக் கவர்ந்த கமல் படம் 10

                 அந்த சொல் கேட்டாலே ஏதோ ஒரு புதுமை அதன் பின்னே மறைந்துள்ளது தெரியும். நடிப்பு என்ற ஒரு வரைவிலக்கணத்தை எதிலும் அணிந்து செல்பவர் அவர். அவருடைய பத்து படங்களை வரிசைப் படுத்துவது என்பது என்னால் முடியாத காரியம் அதே போல் பத்து படம் தேர்ந்தெடுப்பது என்பதும் முடியாத ஒன்று அதனால் தான் எனக்கு சட்டென்று மனதில் அழுத்தியிருந்த படங்களை பரிந்துரைக்கிறேன்.
முற்பகல் 12:15 - By ம.தி.சுதா 31

31 கருத்துகள்:

வெள்ளி, 17 டிசம்பர், 2010

இலங்கைப் பதிவர்களின் கிரிக்கேட் போட்டி ஒரு பார்வை

                  இங்கே முழுப் போட்டியையும் விபரிப்பது சிரமம் என்பதால் அதன் ம(மு)க்கிய தருணங்களை விபரித்துப் போகிறேன். யாரும் சிரியசான பதிவு என நினைத்து வாசிக்க வேண்டாம் பதிவுலகத்தில் எனது முதலாவது நகைச்சுவை பதிவு என நினைக்கிறேன் (ஆனால் வாசிப்பவங்க அழுவீங்கண்ணு தெரியும்.)
             இதமான அந்த மாலைப் பொழுதில் மழை வருமா வராதா என்ற ஒரு நிலைப்பாட்டில் போட்டி நிகழ்வுகள் ஆரம்பமாகியது. சாதாரண போட்டி என யாரும் நினைக்கமுடியாத அளவிற்கு மூக்கின் மேல் விரல் வைக்கும் அளவிற்கு போட்டி ஆயத்தம் நடந்தது குறிப்பாக UDRS முறை கூட இருந்தது ஆனால் என்னவென்றால் அனைத்து பதிவரும் தமது கமரா போனை இழக்க வேண்டியிருந்தது. அதற்கான பொறுப்பை ஏற்ற வரோ சிறப்பாக செய்து கொண்டிருந்தார்.
பிற்பகல் 3:15 - By ம.தி.சுதா 38

38 கருத்துகள்:

புதன், 15 டிசம்பர், 2010

பொது அறிவுக் கவிதைகள் - 4

காதல் கவிதை இப்படியும் புனையலாமா ?


சுவிஸ் ஜனாதிபதி போல்
உனக்கும் வருடத்திற்கு ஒரு காதலன்
அதனால் நெதர்லாந்து போல்
என் காதல் வருடாவருடம் புதைந்து போகிறது
என்னை
காகம் என்று எக்காளித்தாயே
நான் நியுசிலாந்தில்
பிறந்திருந்தல் அதன் மதிப்பறிவாயா
விவாகத்தை ரத்தாக்கும்
விபரம் கேட்டவளே
பிற்பகல் 2:31 - By ம.தி.சுதா 46

46 கருத்துகள்:

திங்கள், 13 டிசம்பர், 2010

HUTCH வலையமைப்பு நிறுத்தப்படப் போகிறது.

               முதலில் இந்த வாரமும் தமிழ் மணத்தில் எனக்கு 11 ம் இடம் பெற்றுத் தந்த என் உறவுகளுக்கு மிக்க நன்றி.
         தொலைத் தொடர்பாளர் வலையமைப்பு என்பது இப்போது உலகின் பிரதான சத்தியாக மாறிவருகிறது திட்டமிடல் இல்லாத நிர்வாகம் எப்படித் திண்டாடும் என்பதற்கு HUTCH நிர்வாகமே பெரும் உதாரணம் ஆகும்.
   இலங்கையில் வலையமைப்பகளுக்கிடையே உருவாகியுள்ள போட்டியானது இவர்களை பெரிதும் நசுக்கி விட்டது. இதனால் தானோ தெரியவில்லை மறைமுகமாக பணத்தை பறிக்கிறார்கள். இது பற்றி நான் முன்னரே விபரமாகக் குறிப்பிட்டிருக்கிறேன் அதன் தொடுப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது
முற்பகல் 11:59 - By ம.தி.சுதா 37

37 கருத்துகள்:

வெள்ளி, 10 டிசம்பர், 2010

சீமானின் விடுதலையின் பின்னணி ரகசியம்

       இன்றைய செய்திகள் அனைத்தும் அவர் விடுதலை பற்றியே பேசிக் கொண்டிருக்கின்றன. நானும் அரசியல் பத்தி எழுதி நீண்ட நாள் ஆகிவிட்டது. உண்மையில் அரசியலிலோ அது சார்ந்த கட்டுரையளிலோ எனக்கு அவ்வளவு ஈடுபாடு இல்லை. சிலவேளை அவற்றை நுனிப் புல் மேய்ந்து வருவதும் உண்டு சிலவேளை என் தந்தையார் பெற்றுக் கொண்ட பாடங்கள் எனக்கு         அதை வேப்பம் கொட்டை போல் மாற்றியிருக்கலாம்.
              சரி விசயத்திற்கு செல்வோம். கடந்த 10-2-2010 அன்று தமிழக மீனவருக்கு ஆதரவாக நடைபெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றில் சில வீர வாசனங்கள் பேசிய குற்றத்தால் சீமான் அவர்கள் கைது செய்யப்பட்டிருந்தார். அவரை நேற்று நீதிமன்று திடீரென விடுதலை செய்தது.
முற்பகல் 11:00 - By ம.தி.சுதா 43

43 கருத்துகள்:

புதன், 8 டிசம்பர், 2010

கருத்தடை முறை உருவான கதை - contraception

              இது சரியானது என்றும் இல்லை பிழையானது என்றும் ஒருவாதம் இருந்து கொண்டே இருக்கிறது கால ஓட்டத்தில் இது தப்பில்லை என்னும் அளவிற்கு மாறியிருக்கிறது.
             பெண்கருத்தடை முறையில் சில சட்டரீதியாகவும் பல சட்டரீதியற்றதாகவும் இருக்கும் நிலையில் இன்று நான் எடுத்து விளக்கப்போவது சட்டரீதியான முறை ஒன்றைப் பறியதாகும்.
              கதை கீழே உள்ளது அதற்கு முன் விடயத்தை சொல்லிப் போகிறேன். இதற்கு T வடிவ லூப் பயன்படத்தப்படுகிறது இது intrauterine devices எனப்படும். இது T வடிவம் எனப் பொதுவாகச் சொன்னாலும் இதிலும் சில வடிவமாற்றங்கள் இருக்கிறது. இதன் செயற்பாடு என்னவென்றால் கருப்பையின் உட்சுவர்களில் தொடுகையை எற்படுத்துவதன் மூலம் அங்கே கருத் தங்கலை தடுக்கிறது. விந்தும் சூலும் சேர்ந்து கருக்கட்டப்பட்டபின் அக்கருவானது கருப்பையின் உட் சுவரான endometrium ல் பதிக்கப்படும். அனால் உட்சுவரில் ஏதாவது வேற்றுப் பொருட்கள் (foreign body) இருக்குமானால் கருப்பை அங்கே கருவளர அனுமதிக்காது.
பிற்பகல் 3:10 - By ம.தி.சுதா 80

80 கருத்துகள்:

திங்கள், 6 டிசம்பர், 2010

பதிவர்களுக்கு லட்ச ரூபாய் பரிசுப் போட்டி...

         இது நேற்று எதேச்சையாகத் தட்டுப்பட்ட விசயங்களில் ஒன்றாகும். மிகவும் வரவேற்பிற்குரிய விசயங்களாக இவை பார்க்கப்படுகிறது. ஒருபுறம் தமிழ் மணம் பெரும் போட்டித் தன்மை ஒன்றை பதிவர் மட்டத்தில் அரங்கேற்றி விட்டுள்ளது. விருதுக்கென ஒரு புறம் போட்டி அது போதாது என்று மறுபுறம் வாரம் 20 பதிவர்களின் தெரிவு என ஒரு கலக்கல் கலக்குகின்றது.
           இன்னுமொரு பக்கம் சிங்காப்பூர் செல்வதற்கான பரிசுடன் அங்கும் ஒரு போட்டி நடைபெறுகிறது.
முற்பகல் 11:07 - By ம.தி.சுதா 77

77 கருத்துகள்:

ஞாயிறு, 5 டிசம்பர், 2010

பொது அறிவுக் கவிதைகள் – 3

மனிதன் வாழச்
சரியான இடம் நோர்வேயாம்
நான் வாழ
சரியான இடம் உன் மனதல்வா
அது மாலை தீவு போல்
சமாதானமாகவே இருக்கிறதே.
முற்பகல் 8:54 - By ம.தி.சுதா 80

80 கருத்துகள்:

வியாழன், 2 டிசம்பர், 2010

வன்னிப்போர்க் களத்தில் பொருட்களின் விலைப்பட்டியல்

          இந்த ஆக்கத்தை முன் அனுமதியின்றிப் பயன்படுத்துவோர் திருடர்களாகவே கருதப்படுவர்.
           இவை ஒரு அதிசயமான விடயமாகும். அதனால் நீங்கள் நம்ப மாட்டீர்கள் எனத் தெரியும் அதற்கு நான் என்ன செய்யலாம். உண்மைகள் என்பது மூடி மறைக்கப்பட்டாலும் ஒரு நாள் வெளிவருவது தானே.
இங்கு நான் குறிப்பிடுவது வன்னியின் போர் உச்சக்கட்டத்தில் இருந்த நேரம் பொருட்கள் இருந்தாலும் வாங்கவோ விற்கவோ முடியாத நிலையில் இருந்த சராசரி விலைப் பட்டியலாகும். இந்த அட்டவணையில் தற்போதுள்ள விலையையும் அங்கே இருந்த விலையும் போடப்பட்டுள்ளது.
பிற்பகல் 12:09 - By ம.தி.சுதா 93

93 கருத்துகள்:

புதன், 1 டிசம்பர், 2010

என்னைக் கவர்ந்த ரஜனியின் படங்கள் 10

              இது யாரும் எழுதாத ஒன்றை நான் எழுத வரவில்லை தான் அனால் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ரசனையிருக்கும் அதிலும் நான் கொஞ்சம் வித்தியாசமாக ரசிப்பவன் பெரும்பாலானவர் ரஜனியின் ஸ்டைலுக்காகவே அவரை ரசிப்பவர்களாக இருந்தாலும்.. நான் ஒரு போதும் அவரது ஸ்டைலுக்காக அவர் படம் ஒன்றை திருப்பிப் பார்த்த்தில்லை.. எனக்கு அவர் நடிப்பில் அந்தக் கண்களே அதிகமாகப் பிடிக்கும் அதன் நடிப்பே பெரும் கதையை சொல்லாமல் சொல்லி விடும். ஞானப்பறவை திரைப்படத்தில் சிவாஜி தன் கண்ணளால் காட்டுவாரே அதற்கடுத்த்தாக கண்காளால் ஒரு கலை ஜாலம் காட்டும் நபராக என்னை கவர்ந்தவர் ரஜனி தான்..
பிற்பகல் 2:04 - By ம.தி.சுதா 66

66 கருத்துகள்:

மொத்தப் பக்கக்காட்சிகள்

பின்பற்றுபவர்கள்

என் குறும்படங்கள்













back to top