Featured Articles
All Stories

வியாழன், 30 டிசம்பர், 2010

அழியா வடுக்கள்

இந்த வருடத்தின் இறுதிப் பதிவுடன் விடை பெறுகிறேன். என் உறவுகள் எல்லோருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்

உறவுக்குள் கரை நீ
என்னிலாடும்
உணர்வுக்குள் துளி நீ
என்னுள் வாழும் காரிகை நீ
மனக் கண்ணில் வரைந்த தூரிகை நீ
பிற்பகல் 11:23 - By ம.தி.சுதா 47

47 கருத்துகள்:

புதன், 29 டிசம்பர், 2010

பத்து ஆண்டினுள் பாதித்த பாடல்கள்.

               இசை என்பது பொதுவானதே இதில் ஈழப்பாடலும் சரி சிங்களப்பாடலும் சரி எம் காது தான் அதன் ஈர்பை தீர்மானிக்கும். அது போல் தான் எனது பார்வையும் அமையப் போகிறது. சகோதரர் ஜீவதர்சன் அழைத்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி கடந்த 10 அண்டில் என் மனதை கவர்ந்த பாடல்களை தருகிறேன்

 “ஆயிரம் தான் கவி சொன்னேன்
          முதலாவது பாடலை கட்டாயம் சகல உறவகளையும் கேட்குமாறு பணிவுடன் கேட்கிறேன். இந்தப் பாடலை நான் முதல் முதலாகக் கேட்டது பதிவர் லோசன் அண்ணாவின் தாயின் பிறந்த நாள் அன்று தான். அப்போது அதை திருடிய எனது கைப்பேசி இன்று் என்னை கலங்கடித்த வண்ணமே இருக்கிறது. பின்னர் தம்பி ஜனகன் தான் இந்த பாடல் பெற உதவினார். வைரமுத்துவின் இந்த பாட்லை ஒரு தடவை கேளுங்கள் நிச்சயம் கண்ணீர் வரும். அவர் ஆயிரத்தில் ஒருவனில் எழுதிய ஒரு வரியால் கடுப்பாகி இருந்த என்னை மீண்டும் அவர் பக்கம் ஈர்த்த வரிகள் இவை
முற்பகல் 2:10 - By ம.தி.சுதா 44

44 கருத்துகள்:

வியாழன், 23 டிசம்பர், 2010

மறக்கப்பட்ட பிரபல பாடகர்கள் Boney M (கிறிஸ்மஸ் சிறப்பு பதிவு)

                   உலகில் வாழும் எந்த ஒரு கிறிஸ்தவனும் இவர்கள் பாடலை அறியாமல் இருக்கவேமாட்டான் அந்தளவுக்கு அருமையாகவும் ஈர்க்கும்
விதத்திலும் படிப்பதில் வல்லவர்கள் யாரா அவர்கள் தான் ஒரு குழுவாக ஐரோப்பியாவையே கலக்கிய Boney M. 1975 ஆண்டில் தான் இவர்கள் முதல் முதல் தொலைக்காட்சி முன்னால் தோன்றினார்கள்.
              மேற்கு ஜெர்மனில் தோற்றம் பெற்ற இந்தக் குழுவானது அவுஸ்திரேலியா, நெதர்லாந்து, பெல்ஜியம் என ஒரு சுற்றச் சுற்றி கலக்கி வந்தது. இக்குழுவின் ஸ்தாபகராக இருந்தவர்Frank Farian ஆவார் அத்துடன் அக்குழுவில்Bobby Farrell, Liz Mitchell, Marcia Barrett, Maizie Williams  ஆகியோர் பங்கு கொண்டிருந்தார்கள்.
முற்பகல் 2:57 - By ம.தி.சுதா 36

36 கருத்துகள்:

திங்கள், 20 டிசம்பர், 2010

யாழ்ப்பாணத்தில் உருவாகும் திரைப்படமும் அதன் பின்னணியும்.

                            எம்மவர்களின் திறமையை மீண்டும் நிருபிக்க ஒரு சந்தர்ப்பமாக நேற்று இது அமைந்தது. aaa movies international ஏற்பாட்டில் எடுக்கப்பட இருக்கும் பனைமரக்காடு என்ற குறும்படத்திற்கான பட பூசை வெங்கடேஸ்வர வரதராயப் பெருமாள் கோயிலில் இடம் பெற்றது.
      
பிற்பகல் 9:03 - By ம.தி.சுதா 54

54 கருத்துகள்:

எனைக் கவர்ந்த கமல் படம் 10

                 அந்த சொல் கேட்டாலே ஏதோ ஒரு புதுமை அதன் பின்னே மறைந்துள்ளது தெரியும். நடிப்பு என்ற ஒரு வரைவிலக்கணத்தை எதிலும் அணிந்து செல்பவர் அவர். அவருடைய பத்து படங்களை வரிசைப் படுத்துவது என்பது என்னால் முடியாத காரியம் அதே போல் பத்து படம் தேர்ந்தெடுப்பது என்பதும் முடியாத ஒன்று அதனால் தான் எனக்கு சட்டென்று மனதில் அழுத்தியிருந்த படங்களை பரிந்துரைக்கிறேன்.
முற்பகல் 12:15 - By ம.தி.சுதா 31

31 கருத்துகள்:

வெள்ளி, 17 டிசம்பர், 2010

இலங்கைப் பதிவர்களின் கிரிக்கேட் போட்டி ஒரு பார்வை

                  இங்கே முழுப் போட்டியையும் விபரிப்பது சிரமம் என்பதால் அதன் ம(மு)க்கிய தருணங்களை விபரித்துப் போகிறேன். யாரும் சிரியசான பதிவு என நினைத்து வாசிக்க வேண்டாம் பதிவுலகத்தில் எனது முதலாவது நகைச்சுவை பதிவு என நினைக்கிறேன் (ஆனால் வாசிப்பவங்க அழுவீங்கண்ணு தெரியும்.)
             இதமான அந்த மாலைப் பொழுதில் மழை வருமா வராதா என்ற ஒரு நிலைப்பாட்டில் போட்டி நிகழ்வுகள் ஆரம்பமாகியது. சாதாரண போட்டி என யாரும் நினைக்கமுடியாத அளவிற்கு மூக்கின் மேல் விரல் வைக்கும் அளவிற்கு போட்டி ஆயத்தம் நடந்தது குறிப்பாக UDRS முறை கூட இருந்தது ஆனால் என்னவென்றால் அனைத்து பதிவரும் தமது கமரா போனை இழக்க வேண்டியிருந்தது. அதற்கான பொறுப்பை ஏற்ற வரோ சிறப்பாக செய்து கொண்டிருந்தார்.
பிற்பகல் 3:15 - By ம.தி.சுதா 38

38 கருத்துகள்:

புதன், 15 டிசம்பர், 2010

பொது அறிவுக் கவிதைகள் - 4

காதல் கவிதை இப்படியும் புனையலாமா ?


சுவிஸ் ஜனாதிபதி போல்
உனக்கும் வருடத்திற்கு ஒரு காதலன்
அதனால் நெதர்லாந்து போல்
என் காதல் வருடாவருடம் புதைந்து போகிறது
என்னை
காகம் என்று எக்காளித்தாயே
நான் நியுசிலாந்தில்
பிறந்திருந்தல் அதன் மதிப்பறிவாயா
விவாகத்தை ரத்தாக்கும்
விபரம் கேட்டவளே
பிற்பகல் 2:31 - By ம.தி.சுதா 46

46 கருத்துகள்:

திங்கள், 13 டிசம்பர், 2010

HUTCH வலையமைப்பு நிறுத்தப்படப் போகிறது.

               முதலில் இந்த வாரமும் தமிழ் மணத்தில் எனக்கு 11 ம் இடம் பெற்றுத் தந்த என் உறவுகளுக்கு மிக்க நன்றி.
         தொலைத் தொடர்பாளர் வலையமைப்பு என்பது இப்போது உலகின் பிரதான சத்தியாக மாறிவருகிறது திட்டமிடல் இல்லாத நிர்வாகம் எப்படித் திண்டாடும் என்பதற்கு HUTCH நிர்வாகமே பெரும் உதாரணம் ஆகும்.
   இலங்கையில் வலையமைப்பகளுக்கிடையே உருவாகியுள்ள போட்டியானது இவர்களை பெரிதும் நசுக்கி விட்டது. இதனால் தானோ தெரியவில்லை மறைமுகமாக பணத்தை பறிக்கிறார்கள். இது பற்றி நான் முன்னரே விபரமாகக் குறிப்பிட்டிருக்கிறேன் அதன் தொடுப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது
முற்பகல் 11:59 - By ம.தி.சுதா 37

37 கருத்துகள்:

வெள்ளி, 10 டிசம்பர், 2010

சீமானின் விடுதலையின் பின்னணி ரகசியம்

       இன்றைய செய்திகள் அனைத்தும் அவர் விடுதலை பற்றியே பேசிக் கொண்டிருக்கின்றன. நானும் அரசியல் பத்தி எழுதி நீண்ட நாள் ஆகிவிட்டது. உண்மையில் அரசியலிலோ அது சார்ந்த கட்டுரையளிலோ எனக்கு அவ்வளவு ஈடுபாடு இல்லை. சிலவேளை அவற்றை நுனிப் புல் மேய்ந்து வருவதும் உண்டு சிலவேளை என் தந்தையார் பெற்றுக் கொண்ட பாடங்கள் எனக்கு         அதை வேப்பம் கொட்டை போல் மாற்றியிருக்கலாம்.
              சரி விசயத்திற்கு செல்வோம். கடந்த 10-2-2010 அன்று தமிழக மீனவருக்கு ஆதரவாக நடைபெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றில் சில வீர வாசனங்கள் பேசிய குற்றத்தால் சீமான் அவர்கள் கைது செய்யப்பட்டிருந்தார். அவரை நேற்று நீதிமன்று திடீரென விடுதலை செய்தது.
முற்பகல் 11:00 - By ம.தி.சுதா 43

43 கருத்துகள்:

புதன், 8 டிசம்பர், 2010

கருத்தடை முறை உருவான கதை - contraception

              இது சரியானது என்றும் இல்லை பிழையானது என்றும் ஒருவாதம் இருந்து கொண்டே இருக்கிறது கால ஓட்டத்தில் இது தப்பில்லை என்னும் அளவிற்கு மாறியிருக்கிறது.
             பெண்கருத்தடை முறையில் சில சட்டரீதியாகவும் பல சட்டரீதியற்றதாகவும் இருக்கும் நிலையில் இன்று நான் எடுத்து விளக்கப்போவது சட்டரீதியான முறை ஒன்றைப் பறியதாகும்.
              கதை கீழே உள்ளது அதற்கு முன் விடயத்தை சொல்லிப் போகிறேன். இதற்கு T வடிவ லூப் பயன்படத்தப்படுகிறது இது intrauterine devices எனப்படும். இது T வடிவம் எனப் பொதுவாகச் சொன்னாலும் இதிலும் சில வடிவமாற்றங்கள் இருக்கிறது. இதன் செயற்பாடு என்னவென்றால் கருப்பையின் உட்சுவர்களில் தொடுகையை எற்படுத்துவதன் மூலம் அங்கே கருத் தங்கலை தடுக்கிறது. விந்தும் சூலும் சேர்ந்து கருக்கட்டப்பட்டபின் அக்கருவானது கருப்பையின் உட் சுவரான endometrium ல் பதிக்கப்படும். அனால் உட்சுவரில் ஏதாவது வேற்றுப் பொருட்கள் (foreign body) இருக்குமானால் கருப்பை அங்கே கருவளர அனுமதிக்காது.
பிற்பகல் 3:10 - By ம.தி.சுதா 80

80 கருத்துகள்:

திங்கள், 6 டிசம்பர், 2010

பதிவர்களுக்கு லட்ச ரூபாய் பரிசுப் போட்டி...

         இது நேற்று எதேச்சையாகத் தட்டுப்பட்ட விசயங்களில் ஒன்றாகும். மிகவும் வரவேற்பிற்குரிய விசயங்களாக இவை பார்க்கப்படுகிறது. ஒருபுறம் தமிழ் மணம் பெரும் போட்டித் தன்மை ஒன்றை பதிவர் மட்டத்தில் அரங்கேற்றி விட்டுள்ளது. விருதுக்கென ஒரு புறம் போட்டி அது போதாது என்று மறுபுறம் வாரம் 20 பதிவர்களின் தெரிவு என ஒரு கலக்கல் கலக்குகின்றது.
           இன்னுமொரு பக்கம் சிங்காப்பூர் செல்வதற்கான பரிசுடன் அங்கும் ஒரு போட்டி நடைபெறுகிறது.
முற்பகல் 11:07 - By ம.தி.சுதா 78

78 கருத்துகள்:

ஞாயிறு, 5 டிசம்பர், 2010

பொது அறிவுக் கவிதைகள் – 3

மனிதன் வாழச்
சரியான இடம் நோர்வேயாம்
நான் வாழ
சரியான இடம் உன் மனதல்வா
அது மாலை தீவு போல்
சமாதானமாகவே இருக்கிறதே.
முற்பகல் 8:54 - By ம.தி.சுதா 82

82 கருத்துகள்:

வியாழன், 2 டிசம்பர், 2010

வன்னிப்போர்க் களத்தில் பொருட்களின் விலைப்பட்டியல்

          இந்த ஆக்கத்தை முன் அனுமதியின்றிப் பயன்படுத்துவோர் திருடர்களாகவே கருதப்படுவர்.
           இவை ஒரு அதிசயமான விடயமாகும். அதனால் நீங்கள் நம்ப மாட்டீர்கள் எனத் தெரியும் அதற்கு நான் என்ன செய்யலாம். உண்மைகள் என்பது மூடி மறைக்கப்பட்டாலும் ஒரு நாள் வெளிவருவது தானே.
இங்கு நான் குறிப்பிடுவது வன்னியின் போர் உச்சக்கட்டத்தில் இருந்த நேரம் பொருட்கள் இருந்தாலும் வாங்கவோ விற்கவோ முடியாத நிலையில் இருந்த சராசரி விலைப் பட்டியலாகும். இந்த அட்டவணையில் தற்போதுள்ள விலையையும் அங்கே இருந்த விலையும் போடப்பட்டுள்ளது.
பிற்பகல் 12:09 - By ம.தி.சுதா 94

94 கருத்துகள்:

புதன், 1 டிசம்பர், 2010

என்னைக் கவர்ந்த ரஜனியின் படங்கள் 10

              இது யாரும் எழுதாத ஒன்றை நான் எழுத வரவில்லை தான் அனால் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ரசனையிருக்கும் அதிலும் நான் கொஞ்சம் வித்தியாசமாக ரசிப்பவன் பெரும்பாலானவர் ரஜனியின் ஸ்டைலுக்காகவே அவரை ரசிப்பவர்களாக இருந்தாலும்.. நான் ஒரு போதும் அவரது ஸ்டைலுக்காக அவர் படம் ஒன்றை திருப்பிப் பார்த்த்தில்லை.. எனக்கு அவர் நடிப்பில் அந்தக் கண்களே அதிகமாகப் பிடிக்கும் அதன் நடிப்பே பெரும் கதையை சொல்லாமல் சொல்லி விடும். ஞானப்பறவை திரைப்படத்தில் சிவாஜி தன் கண்ணளால் காட்டுவாரே அதற்கடுத்த்தாக கண்காளால் ஒரு கலை ஜாலம் காட்டும் நபராக என்னை கவர்ந்தவர் ரஜனி தான்..
பிற்பகல் 2:04 - By ம.தி.சுதா 66

66 கருத்துகள்:

சனி, 27 நவம்பர், 2010

கடவுள்களை தொலைத்து விட்டோம்.

நீ இல்லை என்று தான்
எனக்கு சொல்லிக் கொள் (ல்) கிறார்கள்


நானும் இல்லை என்றே சொன்னேன்
உன்னையல்ல
அவர்கள் சொன்ன சொல்லை


இன்று ஏனோ என் மனம் தவிக்கிறது
இத்தனை நாளாய் தேடியும்...????
உள்மனம் சமூகச் சொல்லை ஏற்க விளைகிறது.


இந்த மண் - உன்னை
விழுங்கிய நாளை மறந்திருக்கும்
ஏனென்றால்
அது உன்னை மட்டும் விழுங்கலையே.
பிற்பகல் 8:25 - By ம.தி.சுதா 96

96 கருத்துகள்:

வியாழன், 25 நவம்பர், 2010

இந்தியாவிலும் தமிழர் சிறுபான்மையினரா..??

                என்ன கேள்வியைப் பார்க்க குழப்பமாயிருக்கிறதா..?? என்ன செய்வது கேட்க வைத்துவிட்டார்களே காரணம் இன்று இடம் பெற்ற மீனவர்களின் பேச்சு வார்த்தையாகும்.
              இன்று இந்தியா மற்றும் இலங்கை மீனவர்களிடையே மீன்பிடி சம்பந்தமான பேச்சு வார்த்தை ஒன்று இடம் பெற்றது இதில் இந்திய மீனவர் சார்பாக தேவதாசும் இலங்கை மீனவர் சார்பாக தவரட்ணமும் கலந்து கொண்டார்கள். இதில் தேவதாசால் வாரத்தில் 2 நாட்களாவது சுதந்திரமாக மீன்பிடிக்க அனுமதி கேட்கப்பட்டது அனால் தவரட்ணம் இதற்கு சம்மதிக்கவில்லை. அவர் சொன்ன காரணம் இந்திய மீனவர்கள் இழுவைப் படகுகளால் மீன் பிடித்து கடல் வளத்தை சீர் குலைக்கின்றனர் என்பதாகும். அனால் 1974 ல் ஏற்படத்தப்பட்ட ஒரு ஒப்பந்தத்தில் இரு சாராரும் சேர்ந்து மீன் பிடிக்கலாம் என்ற ஒரு பரஸ்பர ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
பிற்பகல் 11:37 - By ம.தி.சுதா 66

66 கருத்துகள்:

புதன், 24 நவம்பர், 2010

HOLLYWOOD படங்களில் உள்ள தவறுகள் படங்களுடன்... பாகம்-2

           வாருங்கள் சகோதரங்களே எனது பதிவின் இரண்டாம் பாகத்திற்கு...
பாகம் ஒன்றிற்கு இங்கேபோகவும்.

           ஆரம்பத்திலேயே சொல்லிக் கொள்கிறேன் இது எனது தேடல் தான்........
சென்ற பதிவில் இரு படங்கள் தவறவிடப்பட்டிருந்தது. அதில் ஒன்று  (TITANIC) படத்தில் இடம் பெற்ற காட்சி ஒன்றாகும்.
முற்பகல் 12:05 - By ம.தி.சுதா 34

34 கருத்துகள்:

செவ்வாய், 23 நவம்பர், 2010

HOLLYWOOD படங்களில் உள்ள தவறுகள் படங்களுடன்... பாகம்-1

                 இரண்டாது தடவையாக எமது பித்தலாட்ட தமிழ் சினிமாவிலிருந்து கொஞ்சம் எட்டப் போய் வரப் போகிறேன். தவறுகள் விடுவது மனிதனின் சாதாரண வழக்கம் என்பது யாவரும் அறிந்ததே அதற்காக எம்மவர் போல் கொப்பியடிக்கக் கூடாது தான் (எம்மவரின் கொப்பியை இங்கே பாருங்கள்) பல நுணுக்கமாக எடுக்கப்படும் ஹெலிவுட் உலகத்திலும் பல தவறுகள் வந்தே தீருகிறது அதில் பல விருதுகளைப் பெற்ற படங்களும் உள்ளடங்கியே இருக்கிறது.
        
முற்பகல் 11:19 - By ம.தி.சுதா 37

37 கருத்துகள்:

ஞாயிறு, 21 நவம்பர், 2010

குடும்ப நடிகையின் ஆபாசப் புகைப்படங்கள் (நிமிடக் கதை 18+)


இந்தப் படத்திற்கும் பதிவிற்கும் சம்பந்தமே இல்லை.... என்ன சுதா 18+ ற்கு இறங்கிட்டானே என்று பயப்படாதியுங்கோ..
இது ஒரு தீர்க்கதரிசனக் கதையாகும்.
          அன்றைய செய்திகளனைத்தும் அவள் பெயரைத் தாங்கியே வந்திருந்தது. அவள் பிரபலத்தில் கண் வைத்த சிலர் செய்த சதி தான் இது என பலர் பேசினார்கள்.அது சரி இது எப்படி மதியோடை தளத்திற்குக் கிடைத்தது என்றும் பலர் பேசிக் கொண்டார்கள். அந்தப் படம் செயற்கையானது என ஒரு தொகை பேரும். இல்லை தத்தரூபமாக எடுக்கப்பட்டது என ஒரு குழுவும் வாதிட்டுக் கொண்டது.
முற்பகல் 10:25 - By ம.தி.சுதா 38

38 கருத்துகள்:

சனி, 13 நவம்பர், 2010

வாழைப்பழத்தால் சோளம் வறுப்பதெப்படி..???

          இந்தப் பரந்த உலகத்தினில் எமக்குத் தெரியாமல் எத்தனை விசயம் பரந்து கிடக்கிறது. எப்போதோ ஒரு நாள் ஒரு நண்பன் கேட்டான் வாழைப்பழத்தில் கதிர்வீச்சு (radiation) இருக்குதாமே உனக்குத் தெரியுமா தெரிந்தால் எழுதேன்என்றான். ஆனால் எனக்கும் அவன் நிலமை தான் இப்படிக் கேட்ட விசயமே தவிர பெரிதாய் அறிந்திருக்கவில்லை. அப்படியிருக்கையில் எப்படி எழுதுவது என்று விட்டு விட்டுவிட்டேன் (விஞ்ஞானியே பரிசோதனை முடித்து விட்டீரா..?? முடிவை காட்டென்றால் நான் என்ன செய்ய). ஆனால் கொஞ்சமாய் தெரிந்ததை சொல்லுறேனுங்க.......
         பல தாவரப் பொருட்களில் கதிர்வீச்சு இருக்கிறது எனக் கண்டபிடிக்கப்பட்டாலும் அதிலே நாங்கள் அதிகமாக அறிந்திருப்பது வாழைப்பழம் மட்டுமே ஆகும். சாதாரணமாகவே வாழைப்பழத்தில் பொட்டாசியம் (K-40)அதிகமாகக் காணப்படுகிறது. இதில் காணப்படும் இயற்கை பொட்டாசியம் (அண்ணளவாக 0.0117%) தான் இதன் கதிர் வீச்சுக்குக் காரணம் என்று குறிப்பிடுகிறார்கள்.  ஒரு கிலோகிராம் வாழைப்பழத்தில் 3520 பிகோகியுறிஸ் (3520 picocuries per kg) என்ற அளவில் கதிர்வீச்சு இருக்கிறது. இது பாலில் ஒரு லிற்றருக்கு 20 பிகோகியுறிஸ்  (20 picocuries/liter) என்ற அளவில் இருக்கிறது.
பிற்பகல் 9:23 - By ம.தி.சுதா 62

62 கருத்துகள்:

புதன், 10 நவம்பர், 2010

குதிரைச் சிலைகளின் உருவ அமைப்பும் அதன் அர்த்தமும்...iii

          மனித பரிமாணத்திலிருந்து அவனின் ஒவ்வொரு கலாச்சார மாற்றத்திலும் இந்தக் குதிரை பங்கெடுத்துக் கொண்டு தான் இருக்கிறது.
குதிரைக்கு இந்தளவு மவுசு வந்ததற்கு பல காரணங்கள் இருக்கலாம். பல பழமொழிகளில் இதன் பெயர் இடம்பெற்றிருப்பத்தான் இதன் இன்னுமொரு தனிச் சிறப்பு.
                 நடிகர் பிரபு கூட இடைப்பட்ட ஒரு காலப்பகுதியில் கட்டாயம் ஒரு பாடலாவது குதிரையில் வரும்படி வைத்திருப்பார். அரங்கேற்ற வேளை திரைப்படத்தில் அவர் வரும் காட்சி மிகவும் கம்பீரமாக இருக்கும். கம்பீரத்திற்காகத் தான் அதை விரும்பினார்களோ தெரியல.
பிற்பகல் 7:41 - By ம.தி.சுதா 40

40 கருத்துகள்:

சனி, 6 நவம்பர், 2010

இமயத்தில் ரஜனி என்ன செய்கிறார்.. (புகைப்படத்துடன்).

                      சில விசயங்களில் சுப்பர் ஸ்டார் சுப்பர் ஸ்டாராகவே இருக்கிறார். அவரை வெற்றியோ தோல்வியோ பாதிப்பதில்லை என்பதற்கு இதுவும் ஒரு பெரும் உதாரணமாகும். இங்கு சண் ரீவி பிழிந்த தேசிக்காயை பிழியோ பிழியென்று பிழிந்து கசக்கும் சாற்றைக் கூடா கரும்புச் சாறென்று கூறி ஏற்கனவே நாம் குடித்த கருப்பம் சாற்றை வேப்பெண்ணையென நினைத்துக் கொண்டிருக்க இவரைப் பார்த்திர்களா எழுதிய பதிவை திருப்பத் திருப்ப வாசிக்கும் புதுப் பதிவர் போல் இல்லாமல் (என்னைப் போல்) மனிதர் புதிதாய் சிந்திக்க புறப்பட்டு விட்டார்.
முற்பகல் 10:49 - By ம.தி.சுதா 34

34 கருத்துகள்:

புதன், 3 நவம்பர், 2010

கிரிக்கேட்டில் கிப்சும்.. சிலாகிக்கப்படும் புத்தகமும்..

             ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் தென்னாபிரிக்கா அணியின் தூண் போல் நின்றவர்களில் ஒருவர் தான் இந்த கெர்சல் கிப்ஸ் (hersels gibbs) ஆவார். இவர்  கேறிகிருஸ்டனுடன் களம் புகுந்தால் மைதானமே ஒரு அல்லோகல்லோலப்படும். அவுஸ்திரேலியாவுக்கு தென்னாபிரிக்கா பதிலடி கொடுத்த போட்டியை யாரும் மறந்திருக்கமாட்டீர்கள் என நினைக்கிறேன். கிளேன் மெக்ராத் ஒய்வால் சந்தோசப்பட்டவர்களில் இவரும் ஒருவர் தான் காரணம் பல தடவை  காலால் மறைத்த குற்றத்திற்காய் இவர் களம் விலகியிருக்கிறார்.
         
பிற்பகல் 5:08 - By ம.தி.சுதா 34

34 கருத்துகள்:

திங்கள், 1 நவம்பர், 2010

இலக்கியத்தில்....... சிறந்த நட்பு இது தான்...

         தமிழ் இலக்கியம் என்பது ஒரு பெரும் கடல் அங்கு பாசியிலிருந்து வலம்புரி வரை எல்லாம் இருக்கிறது. முத்துக் குளிப்போருக்குத் தான் பெரிய விசயங்க கிடைக்கும் அவர்களின் தயவால் ஏற்படும் குழப்பத்தால் சலனப்படும் சில மீன்கள் சில சிறியவரின் தூண்டிலிலும் விழுகிறது. அப்படி ஒன்று தான் இக்கதை. என்னைப் பொறுத்த வரை என்னை மிகவும் கவர்ந்த இல்லை.. இல்லை மிகவும் பாதித்த நட்பு இது தான். 
          சென்றவாரம் ஒரு சகோதரி ஒருவர் நட்புப் பற்றி எழுதுங்களேன் எனக் கேட்டிருந்தார். எனக்கு உடனே இக்கதை தான் நினைவுக்கு வந்தது காரணம் இதுவும் ஒரு வதனப்பத்தகத்தி (FACE BOOK)  ற்கு பொருத்தமான கதை தான். வாருங்கள் பார்ப்போம்.
பிற்பகல் 1:51 - By ம.தி.சுதா 28

28 கருத்துகள்:

சனி, 30 அக்டோபர், 2010

மறைமுகமாய் பணத்தை பறிக்கும் HUTCH வலையமைப்பு

               உலக மாற்றத்தில் தொலைத் தொடர்பாடல் ஆனது முக்கிய பங்கினை பெற்றுள்ளது. அதிலும் இலங்கையைப் பொறுத்தவரை கைப்பேசி வலையமைப்புகளின் விஸ்தரிப்பானது பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

             வாடிக்கையாளரைப் பொறுத்தவரை எதைப் பாவிப்பது எதைத் தவிர்ப்பது என குழம்பிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இங்கு முக்கிய விடயமாகக் குறிப்பிடப்படுவது என்னவென்றால் ஒரு வலையமைப்பானது தனது வாடிக்கையாளரிடம் மறைமுகமாகப் பணம் பறிக்கும் செயற்பாட்டில் இறங்கியுள்ளது.
பிற்பகல் 6:17 - By ம.தி.சுதா 27

27 கருத்துகள்:

புதன், 27 அக்டோபர், 2010

விபசாரம் தோன்றிய கதை...!!!

          உலகில் உன்னிப்பாகக் கவனிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் விடயங்களில் இதுவுமொன்றாகும். காரணம் அணுகுண்டளவிற்கு ஒரு பயங்கர ஆயுதங்களில் இதுவுமொன்றாக இருக்கிறது.

          இங்கு விபச்சாரத்தில் பெண்களை மட்டும் நான் குறிப்பிடுவதாக நினைக்க வேண்டாம். அண்மையில் என் தளத்திற்கு 4 எரிதல் ஊட்டம் வந்தது அது சீனா மொழியில் இருந்தது. அதை வதனப்புத்தகத்தில் போட்டேன் ஒரு அமெரிக்கா நண்பர் (ஐங்கரன்) தன் சீனா நண்பரின் உதவியுடன் அதனை மொழிபெயர்த்து அனுப்பியிருந்தார். அது ஒரு விபச்சாரம் சம்பந்தப்பட்ட ஒரு விளம்பரமாகும். அங்கே பார்த்தால் இருபாலாரும் இருந்தார்கள் (யாருக்காவது தொடுப்பு வேணுமா..???)
பிற்பகல் 1:26 - By ம.தி.சுதா 36

36 கருத்துகள்:

சனி, 23 அக்டோபர், 2010

நான் அறிந்த நடிகர் விக்ரம்...

தமிழ் சினிமா நடிகர் பலர் நாம் போரடித்தான் முன்னுக்கு வந்தோம் என்றாலும் உண்மையாக போரடியவர்கள் ஒரு சிலர் தான் அதில் ஒருவர்தான் நடிகர் விக்ரம். எனது அபிமான நட்சத்திரம்.
பரமக்குடியில் 1966 சித்திரை மாதம் 17 ம் திகதி பிறந்தவர் தான் ஜோன் கெனடி வினோத்ராஜ் என்ற நடிகர் விக்ரம். அமெரிக்க ஜனாதிபதியான ஜோன் கெனடி என்பவரதும் நடிகரான வினோத் ராஜ் என்பவரதும் நினைவாக அவரது இயற் பெயர் இப்படி இடப்பட்டது பின்னர் அவரை சியான் என்றும் அவரது ரசிகர்கள் செல்லமாக அழைத்தனர்.
முற்பகல் 8:25 - By ம.தி.சுதா 30

30 கருத்துகள்:

திங்கள், 18 அக்டோபர், 2010

பாடகர்களின் முதல் பாடல்கள்.... (1)

          இப்பொது புதுப் புதுப் பாடகர்களின் வருகையானது இசையுலகில் பல வித்தியாசங்களை எற்படுத்தியுள்ளது. எனக்குத் தெரிந்த சிலரின் முதல் பாடல்களை தருகிறேன். உங்களுக்குத் தெரிந்ததை நீங்கள் சொல்லுங்கள்.
முதலில் எனக்கு பெரிதும் பிடித்த  அந்த இருவரிலும் இருந்து தொடங்குகிறேன். அவர்கள் எனக்கு மட்டுமல்ல உங்களுக்கும் பிடித்தவர்கள் தான். முதலில் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தை சொல்ல நினைத்தாலும் அவரது முதல் பாடலில் பல சர்ச்சைகள் இருப்பதால் பின்னர் சொல்கிறேன்
பிற்பகல் 11:12 - By ம.தி.சுதா 45

45 கருத்துகள்:

வெள்ளி, 15 அக்டோபர், 2010

பொது அறிவுக் கவிதைகள் (2)

ஆண்டுகளும் விழாக்களும்....

கவிதை பாகம் ஒன்றுக்கு இங்கே சொடுக்கவும்

ஒரு ஆண்டாய் கடிதம் தந்தே
என் காதல் உன்னிடம்
காகித விழாக் கொண்டாடியது.

இரண்டு ஆண்டாகியும் – நீ
பஞ்சு விழா எடுக்கிறாய்
இந்த நெருப்பு அருகிருப்பது தெரியாமல்
பிற்பகல் 7:26 - By ம.தி.சுதா 16

16 கருத்துகள்:

திங்கள், 11 அக்டோபர், 2010

இலங்கை கதை திருடிய பிரபல இயக்குனர்..

-->

            எனது பதிவுலகப்பயணத்தின் 50 வது பதிவுக்குள் தங்களை அன்புடன் வரவேற்கிறேன். பதிவர்கள் நாளான யூன் 14 ம் திகதி திறந்தே ஆகணும் என்ற ஒரு வெறியில் திறந்தது தான் இந்த நனைவோமா? பெயர் வைத்த கதையை கேட்கக் கூடாது அது பெரிய கதை) வலைப் பதிவாகும். சரியாகத் தட்டச்சுத் தெரியாத ஒருவனாக திறக்கப்பட்ட என் வலைப் பதிவிற்கு முதல் பதிவை எப்படி இட்டேன் தெரியுமா? குருஜீ (guruji.com) போய் அங்குள்ள தமிழ் தட்டச்சுப் பலகையால் அதன் தேடு பெட்டிக்குள் (search box) சொடுக்கலின் மூலம் தட்டச்சிட்டு அதைப் பிரதி பண்ணிக் கொண்டு வந்து பதிவகப் பெட்டிக்குள் இட்டேன் அது தான் என் முதல் பதிவானது. ஆனால் இப்போது NHM writter எனக்குப் பெரிதும் உதவியாக மாறியுள்ளது. நான் ஒரு காவி போல் கை வைக்கும் எல்லாக் கணணியிலும் அதை சேமித்து விட்டு வருகிறேன். (யான் பெற்ற துன்பம் பிறர் பெறக் கூடாது என்பதற்காக).
பிற்பகல் 7:05 - By ம.தி.சுதா 76

76 கருத்துகள்:

வெள்ளி, 8 அக்டோபர், 2010

காசால் போன் சார்ஜ் இடுவது எப்படி...???

                       ஒருவருக்கு இதயம் இருக்கிறதோ இல்லையோ அவரிடம் கட்டாயம் ஒரு கைப்பேசி இருக்கும். அந்தளவுக்கு கைப்பேசி என்பது ஒரு அத்தியாவசியப் பொருளாகிவிட்டது.
                     சில வேளை அசண்டையீனமாக வெளியிடம் செல்கையில் கைப்பேசியை மின்னேற்றம் செய்வதை மறந்து சென்று விட்டு அங்கிருந்து அவசரத்திற்குக் கதைப்பதற்காக முழிப்போம். நான் இப்படிப் பெரிதும் அல்லல் பட்டிருக்கிறேன் நீங்கள் அப்போது இக் கட்டுரை பற்றிக் கட்டாயம் சிந்திப்பீர்கள்.
பிற்பகல் 7:01 - By ம.தி.சுதா 67

67 கருத்துகள்:

புதன், 6 அக்டோபர், 2010

நான் அறிந்த பாரதிராஜா....!!!!


                தனிச்சிறப்புகள் கொண்ட ஒருவன் தான் வாழ்க்கையில் வெல்ல முடியும் அதிலும் ஒரு துறையில் பல போட்டியாளர் மத்தியில் தமக்கென ஒரு தனியிடம் பெறுவது என்பது வித்தியாசம் தான்... முகப்பூச்சு, ஒப்பனை, கொட்டகை என்று பணத்தை அள்ளிவீசி படம் எடுத்துக் கொண்டிருந்தவருக்கு ஒரு புது உலகைக் காட்டியவர் தான் இந்த பாரதிராஜா. 
                1941 ம் ஆண்டு ஆடி மாதம் 17 ம் திகதி தமிழ் நாட்டின் அல்லி நகரம் எனும் இடத்தில் பெரியமாய தேவர் மற்றும் மீனாட்சியம்மா தம்பதிக்கு ஐந்தில் ஒன்றாகப் பிறந்தவர் தான் தமிழ் சினிமாவில் புது மாற்றம் காட்டிய இந்த பாரதிராஜா. இவர் மனைவி பெயர் சந்திர லீலாவதி ஆகும் இவருக்கு மனோஜ் என்றொரு மகனும் ஜனனி என்றொரு மகளும் உள்ளார்கள். வயல் வேலைகளே பிழைப்பென்றிருந்த இவருக்கு 1963 ல் 75 இந்திய ரூபாய் சம்பளத்துடன் அன்ரி மலேரியல் ஊழியராக வேலை கிடைத்தது. இவர் எழுதி நடித்த முதல் நாடகம் “ஊரு சிரிக்கிறது என்தாகும்.
பிற்பகல் 8:30 - By ம.தி.சுதா 34

34 கருத்துகள்:

வெள்ளி, 1 அக்டோபர், 2010

யாழில் கலக்கிய எந்திரன் (30.9.2010)..????

இது எந்திரனுக்காக நான் ஓடியுள்ள ட்ரெயிலர் மட்டும் தான் விமர்சனமல்ல...                                    

                                      நம்பமுடியவில்லைத் தான். ஆரம்பத்தில் நண்பர் அலைபெசியில் அழைத்த போது விளையாட்டாக அழைப்பதாய் நினைத்தேன். பின்னர் அவருடைய பேச்சில் உள்ள உறுதியை நம்பிக் கிளம்பினேன். அப்பாடி ராஜா திரையரங்கில் என்ன ஒரு கூட்டம். தகவல் வேகமாய் பரவுவதற்கு இதுவும் ஒரு உதாரணம். என்ன ஒரு விடயம் என்றால் யாழின் பிரபல பதிவர்கள் ஆறுமணிக்கே பார்த்தது தான்.
முற்பகல் 3:15 - By ம.தி.சுதா 24

24 கருத்துகள்:

வியாழன், 30 செப்டம்பர், 2010

இனிமையான வாழ்வுக்கான CANDO தத்துவம்....!!!

                             இது அமெரிக்காவில் கார் புரட்சிக்க வித்திட்ட ஹென்றி போர்ட் ஆல் உருவாக்கப்பட்டு கடைப்பிடிக்கப்பட்டதாகும். யார் இந்த ஹென்றி போட் என்றால் 30 ஜீலை 1863 ல் வில்லியம் பொட் மற்றும் மேரி போட் ஆகியோருக்கு பிறந்தவர். அமெரிக்காவில் பெரிய மாற்ற்தை எற்படுத்திய இவர் 7 ஏப்ரல் 1947 ல் தனது83 வது வயதில் இறந்தார். அதாவது CANDO என்றால் ஆங்கிலத்தில் செய்ய முடியும் என்று பொருள்படும். இவர் கடைப்பிடித்த 5 நடைமுறைகளின் ஆரம்ப எழுத்தக்களால் உருவாக்கப்பட்டதே இதுவாகும்.

C – Cleanup
A - Arranging
N – Neatness
D – Discipline
O – Ongoing improvement.
முற்பகல் 11:13 - By ம.தி.சுதா 20

20 கருத்துகள்:

சனி, 25 செப்டம்பர், 2010

என் வன்னி முகாம்....!!!

காலை மணியோசை
தூபமிடும் வானம்
டம்ளர் நீருடன்
காலைச் சிற்றுண்டியாய்
இரவின் உண்ணாவிரதம்
கலைக்கப்படும்

சப்பாணி கட்டி உண்போரின்
உணவுண்ணல் சிரமத்துக்காய்
நாள்தோறும் விசேட உணவு
வாய் என்ற குறிகாட்டிக்கு
எட்ட வைத்தே
இலக்கு வைத்தடிக்க
கடலை என்ற பெயரில்
விடலைகளை மந்த மாக்கும்
காலையுணவு
பிற்பகல் 10:00 - By ம.தி.சுதா 22

22 கருத்துகள்:

வியாழன், 23 செப்டம்பர், 2010

அசினின் சமூகப்பணியால் பார்வையிழந்த யாழ் வறியவர்கள்...!!!

                      ஓவ்வொரு தமிழனும் கட்டாயம் பார்க்க வேண்டிய செய்தியாகும். முக்கியமாக பதிவர்கள், வாசகர்கள் மற்றும் இணைய உரிமையாளர்கள் ஒத்துழைப்பு நல்குங்கள்.
பாதிக்கப்பட்டவர்
                   இது அசினின் பிள்ளையார் பிடிக்க குரங்கு வந்த கதையாகும். இதில் உள் குற்றம் வெளிக் குற்றம் பார்க்கக் கூடாது தான் அனால் பாதிக்கப்பட்டது ஏழைகளல்லவா. திரையில் ஏழைகளுக்கு உதவத் துடிக்கும் நடிகர்களோ அல்லது அவர்கள் ரசிகர்களோ இதை கவனத்திலெடுங்கள்.
சம்பவம் என்னவென்றால் சில நாட்களிற்கு முன் யாழ் வந்திருந்த அசின் இங்குள்ள 300 வறியவர்களுக்கு விழிவெண்படல அறுவைச்சிகிச்சை இலவசமாக செய்து கொடுத்தார்.
பிற்பகல் 12:34 - By ம.தி.சுதா 96

96 கருத்துகள்:

புதன், 22 செப்டம்பர், 2010

ஒரே சொல் எதிர்மாறான அர்த்தம்...!!!!


                                 கால் வாருதல் என்ற சொல்லின் தமிழ் அர்த்தத்தை பார்த்தால் துரோகம் தான். ஏனெனில் ஒருவரின் காலை வாரி விட்டு அவரை வீழ்த்துவது எம்மவரில் பலருக்கு கைவந்த கலை. இது ஆண்டாண்டு காலமாக தமிழனின் வரலாற்றுப் பதையில் பரீட்சையமான சொல் ஒன்று ஆனால் அவர்களுக்கு நரகத்திலும் இடம் கிடைக்காது.

                                   மேற்கத்தைய இடங்களில் இச்செயல் செய்பவருக்கு நிச்சயம் சொர்க்கம் கிடைக்கும் என்று சொல்வார்கள். அப்படி அங்கு என்னதான் வித்தியாசப்படுகிறது என்று பார்த்தால். இரு இடங்களிலும் நடைபெறும் செயற்பாடுகள் தான் காரணம். இங்கு நடப்பவை பற்றி நான் கூறித்தான் நீங்கள் அறிய வேண்டும் என்பதில்லை.
முற்பகல் 9:00 - By ம.தி.சுதா 32

32 கருத்துகள்:

ஞாயிறு, 19 செப்டம்பர், 2010

பேன் பார்க்கப் போகும் எந்திரன்.....!!!

                          இது ஒரு புரட்சியை ஏற்படுத்தப் போகும் தொழில் நுட்பப் வளர்ச்சியாகும். ஆனால் இதற்கான செலவுகளுடன் ஒப்பிடுகையில் மருத்துவத்திற்கு பாவிப்பதற்கான ஆய்வுகள் தான் நடைபெற்றுவருகிறது.
அதற்கு அதிவேக இணையத் தொழில் நுட்பம் தேவை. அதற்காக நம்மூர் தொலைத் தொடர்பாளர் விளம்பரங்களை நம்ப வேண்டாம். 1Mbps வேகம் என்று சொல்வார்கள் ஆனால் 50Kbps வருவதே பெரும் பாடு.
பிற்பகல் 1:00 - By ம.தி.சுதா 10

10 கருத்துகள்:

வெள்ளி, 17 செப்டம்பர், 2010

போட்டிப் போக்கு மாற்றி அணியும் கண்டு கொள்ள ஐசிசி யும்....!!!!


                    இலங்கை அணியின் இந்தச் சம்பவம் பலர் அறிந்திருந்தாலும் சிலருக்கே இதன் காரணம் தெரிந்திருக்கிறது.. அது தாங்க கடந்த வருடம் நொந்து நூலாகிய நிலையில் இலங்கை வந்த கிரிக்கேட்டிற்கே கிடைத்த சாபமாகக் கருதப்படும் பாகிஸ்தான் அணி பற்றிய விடயம் பற்றித்தான் கூறுகிறேன்.


                   இலங்கை வந்த பாகிஸ்தானுக்கு ஆரம்பம் முதலே பலத்த அடி டெஸ்ட் போட்டியில் 2-0 தோல்வி. ஒரு நாள் போட்டியில் முதல் மூன்று போட்டியும் அடி என சோர்ந்து போனது. அப்போது தான் அந்தச் சம்பவம் நடந்தது. அதாவது ஜனாதிபதியின் பாகிஸ்தான் விஜயம். இரண்டுக்குமே சம்பந்தம் இல்லைப் போல் தான் இருந்தது. ஆனால் அடுத்த போட்டிகள் தலைகீழாக மாறியது. அடுத்து வந்த இரண்டு ஒரு நாள் போட்டியிலும் பாகிஸ்தான் தான் வெற்றி. இலங்கை படு தோல்வியடைங்த்து. சரி போனால் போகட்டும் என்று பார்த்தால் 20-20 அதே பாட்டு தான் அப்படியானால் என்ன நடந்திருக்கும். ஐசிசி ற்கும் தெரியும், எனக்கும் தெரியும், இப்ப உங்களுக்கும் தெரியும்.
பிற்பகல் 11:42 - By ம.தி.சுதா 17

17 கருத்துகள்:

வியாழன், 16 செப்டம்பர், 2010

பிரபு தேவாவின் வலையில் விழுந்த பெண்களின் பட்டியல்.....!!!!

                         இரண்டு சினிமா முக்கியஸ்தர்களின் பெயரைத் தன் பெயரில் கொண்டு தனக்கென்றோர் நிரந்தரப் பட்டப்பெயர் வாங்கிக் கொண்டவர் தான் நமது நடனப்புயல் பிரபுதேவா.. 10ம் ஆண்டுவரை தான் படித்திருந்தாலும் இவர் திறமை மிகவும் உயர்ந்தது. இந்திய சினிமாவிலேயே நடனப் புரட்சியை ஏட்படுத்தியவர் என்றால் அது பிரபு தேவாதான் (இதை நான் சொல்ல வில்லை டிஸ்கவரி காணொளி ஒன்று சொல்கிறது).

                       ஆனால் இவர் சில பெண்களின் வாழ்வில் நடனமாடியது தான் பொறுக்க முடியாத குற்றமாகும். இங்கு நான் குறிப்பிடப் போவது ஒரு சிலரைப்பற்றித்தான் காரணம் எனக்கு தெரிந்ததை தான் என்னால் சொல்ல முடியும்... (உங்களுக்கு ஏதாவத தெரிந்தால் கருத்தப் பெட்டியில் இடுங்கள்)..
பிற்பகல் 3:50 - By ம.தி.சுதா 48

48 கருத்துகள்:

புதன், 15 செப்டம்பர், 2010

வாகனக் கண்ணாடியினுள் நீராவி படிவதை தடுக்கும் ஒரு வழி....!!!

                         என்ன இவன் புதுப் புது கதைவிடுகிறான் என்று யாரும் நினைக்க வேண்டாம். இவை நானும் என்னைச் சுழ இருந்தவர்களும் மேற்கொண்டவை தான்..
                      இனி மழை காலம் வந்துவிட்டது இப்பிரச்சனை எல்லோருக்கம் சிரமத்தைக் கொடுக்கும் ஒரு விடயமாக மாறிவிட்டது. அதற்கான ஒரு சின்னத் தீர்வைத் தான் இந்தச் சின்ன ஆக்கத்தில் பதிவிடுகிறேன். வழமையாக நண்பர்கள் கேட்கும் ஒரு வேண்டுகை ஏன் சின்னச் சின்ன ஆக்கங்களாய் எழுதுகிறாய் என்று. என்ன செய்வது பானையில் உள்ளது தானே அகப்பையில் வரும்.
முற்பகல் 12:14 - By ம.தி.சுதா 30

30 கருத்துகள்:

திங்கள், 13 செப்டம்பர், 2010

தமிழ் நாடு ஈழத்திற்கு இதையாவது தருமா..?

                       ஈழத்தமிழர் மீண்டும் ஒரு முறை தமிழக அரசிடம் வேண்டி நிற்க வேண்டிய தருணம் வந்திருக்கிறது. இதையாவது முதல்வர் கண்டு கொள்வாரா.. அல்லது பசப்பு வார்த்தை பேசி நழுவிக் கொள்வாரா தெரியவில்லை.
                         சம்பவம் இது தான் 2008 ம் ஆண்டளவில் நாமக்கல் மாவட்டத்தில் பொலிஸாரால் ஒரு சிலை கைப்பற்றப்பட்டது. இது முருகக் கடவுளின் பஞ்சலோகச் சிலையாகும்.
பிற்பகல் 11:55 - By ம.தி.சுதா 16

16 கருத்துகள்:

ஞாயிறு, 12 செப்டம்பர், 2010

சுவர்ணலதாவின் வாரலாற்றுத் தடம்....

                               ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட ஒரு பாடகிக்காக எழுதப்படும் ஒரு வரலாற்றுத் தொகுப்பு இதுவாகும்.
                               1973 ம் வருடம் இந்தியாவின் கேரளாவில் உள்ள பாலக்காடு எனும் இடத்தில் இவர் செருக்குட்டி மற்றும் கல்யாணி அகியோருக்கு மகளாகப் பிறந்தார். இவரது தந்தையார் ஒரு சிறந்த ஆர்மோனிய வாசிப்பாளர் ஆவார். 1987 காலப்பகுதியில் சென்னைக்க குடிபெயர்ந்த இவர் எம்எஸ் விஸ்வநாதனால் அடையாளம் காணப்பட்டு இளையராஜாவிற்கு அறிமுகப்படுத்தப்பட்டார். இவர் பாடிய முதல் தமிழ் பாடல் 1987 ம் ஆண்டு நீதிக்குத் தண்டனை என்ற படத்தில் பாடிய பாரதியார் பாடலாகும் (சின்னம் சிறு கிளியே). ஆனால் சிலர் இது 1982 ல் வந்ததாகச் சொல்லிக் கொள்கிறார்கள்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் பல்லாயிரகண்கணக்கான திரைப்படப் பாடல்களை பாடி புகழ் பெற்றவர். பாரதிராஜாவின் இயக்கத்தில் வெளிவந்த கருத்தம்மா படத்தில் இவர் பாடிய பாடலுக்காக (போறாளே பொன்னுத்தாயி) சிறந்த பின்னணி பாடகி என்ற தேசிய விருது வழங்கப்பட்டது.
பிற்பகல் 6:55 - By ம.தி.சுதா 28

28 கருத்துகள்:

யாழ்தேவி இணையமும் நாசமாய்ப்போகும் மாணவர்களும்...

             வாருங்கள் வாசகப் பெருமக்களே தலைப்பைப் பார்த்தவுடன் தலை சுற்றுகிறதா..? என்ன செய்வது எனது கட்டுரையின் கனத்தை குறைக்க கூடாது என்பதற்காகவே இருவிசயத்தையும் தொடர்புபடுத்தி எழுதுகிறேன்.. உள்ளே இருப்பது முக்கியமான சமூகப்பிரச்சனையாகும்.

                          முதலில் என்னை நட்சத்திரப் பதிவராக்கிய யாழ்தேவிக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன் (தலைப்பை தப்பாகப் புரிந்தால் நான் பொறுப்பில்லை). 
              
பிற்பகல் 1:57 - By ம.தி.சுதா 26

26 கருத்துகள்:

மொத்தப் பக்கக்காட்சிகள்

பின்பற்றுபவர்கள்

என் குறும்படங்கள்













back to top